தமிழ்மொழி கருத்துணர்தல் தாள் கேள்வி 23 மின்நூல் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 இதனை அச்செடுத்து பயிற்சியாகச் செய்யலாம். இந்தத் தொகுப்பில் மொத்தம் 20 பயிற்சிகள் உள்ளன. தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23 மின்நூல் தொகுப்பு ஆக்கம் : ஆசிரியர் திருமதி நளினி ஜெயராமன் [கோத்தா பாரு தமிழ்ப்பள்ளி, பேரா], ஆசிரியர் திருமதி வாசுகி முருகையா [கோப்பெங் தமிழ்ப்பள்ளி, பேரா] மின்நூலைப் பார்க்க படத்தைச் சொடுக்கவும். CLICK TO VIEW FLIPBOOK மின்நூலைப் பதிவிறக்கம் செய்ய இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO DOWNLOAD ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
வாய்பாடு கணிதப் புதிர் விளையாடலாம் வாருங்கள் மாணவர்களே.! உங்கள் திறமையைச் சோதித்துப் பாருங்கள். WORDWALL : வாய்ப்பாடு கணிதப் புதிர் ஆக்கம் : ஆசிரியர் ரா.ரூபா பள்ளி : கீர் ஜொகாரி தமிழ்ப்பள்ளி, பேரா கீழே உள்ள படத்தைச் சொடுக்கவும் CLICL TO PLAY ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் நடடிக்கைகள், போட்டிகள், வெற்றிகள், சாதனைகள் ஆகியவை மின்னூல் வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. படத்தைச் சொடுக்கவும் கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கி 'வெள்ளி மலர்-2' மின்னூலைப் பார்க்கலாம்.
பினாங்கு, அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டி (PENANG INTERNATIONAL YOUNG SCIENTIST EXHIBITION) 2019 கடந்த 02 - 04.11.2019ஆம் நாள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேரா, கிரியான் மாவட்டம், ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். 3 orang murid SJK(T) Arumugam Pillai, Alor Pongsu, Daerah Kerian, Perak menang Pingat Silver dalam Penang International Young Scientist Exhibition pada 2 - 4 November 2019 மொத்தமாக 83 குழுக்கள் பங்கேற்ற இந்தப் போட்டிக்காக ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் காயத்திரி முனிஸ்வரன், மகிழ்நன் சுப்பிரமணியம், சந்தோஷ் கோபிநாதன் ஆகிய மூவரும் மகிழ் அறிவியல் விளையாட்டை உருவாக்கி இருந்தனர். இப்பள்ளியின் ஆசிரியர்கள் பிரகலாதன் பாலகிருஷ்ணன் மற்றும் பவாணி இராமசாமி ஆகிய இருவரும் மாணவர்களின் பயிற்றுநராக பணியாற்றினார்கள். குறைந்த மாணவர் பள்ளியான ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி இதுபோன்ற அனைத்துலக நிலை போட்டியில் வெற்றி பெற்றிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை மிகவும் சிறப்பா...
22.04.2018 ஞாயிற்றுக்கிழமை கடாரத்திலுள்ள எயிம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தேசிய நிலை செந்தமிழ் விழா போட்டியில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 30 போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர். மலேசியக்கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற இந்தத் தேசிய நிலையிலான போட்டியில் மொத்தம் 10 மாநிலங்களிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்மொழி சார்ந்த மொத்தம் 13 போட்டிகளில் இந்தச் செந்தமிழ் விழாவில் இடம்பெற்றுள்ளன. தமிழ்ப்பள்ளி , தேசியப் பள்ளி , இடைநிலைப் பள்ளி , படிவம் 6 என 4 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்வார்கள். மாநில நிலையில் முதலாம் , இரண்டாம் நிலையில் வெற்றிபெற்ற மாணவர்கள் இப்பொழுது தேசிய நிலையில் தங்கள் தமிழ்மொழித் திறனையும் ஆற்றலையும் வெளிபடுத்தவுள்ளனர். பேரா மாநிலத்தின் நிகராளிகளாக 30 மாணவர்கள் கலந்துகொள்ளும் வேளையில் அவர்களோடு மாநிலக் கல்வித் திணைக்களத்தின் சார்பில் 2 உயர் அதிகாரிகளும் 6 ஆசிரியர்களும் கலந்துகொள்வார்கள். தேசிய நிலை செந்தமிழ் விழாவில் கலந்துகொள்ளும் பேரா மாநிலப் போட்டியாளர்களின் விவரங்கள் பின்வருமாறு:- * தமிழ்ப்பள்ளி...
WALAUPUN sekolah hanya mempunyai enam orang murid, namun ia tidak menjadi halangan untuk guru ini memberi yang terbaik kepada anak muridnya. Guru bahasa Tamil, Matematik dan Sains Sekolah Jenis Kebangsaan Tamil (SJKT) Ladang Sabrang, Teluk Intan, Perak, L Chelva berkata beliau tidak pernah berputus asa dalam membimbing muridnya untuk mengeluarkan potensi diri. "Kaedah pembelajaran abad ke-21 (PAK21) memang membantu menarik minat murid dalam mentransformasikan mereka ke peringkat lebih tinggi," katanya. Tambahnya lagi, menerima lantikan sebagai Edufluencer daripada Kementerian Pendidikan (KPM) merupakan satu tanggungjawab besar, selain membimbing murid agar dapat menguasai PAK21 beliau juga perlu berkongsi kaedah yang digunakan dengan guru lain. Baca Lagi..
4, 5, 6ஆம் ஆண்டு தமிழ்மொழிப் பாட வாக்கியம் அமைத்தல் பயிற்றி இங்கே வழங்கப்படுகின்றது. கெடா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் இதனை உருவாக்கியுள்ளார். வாக்கியம் அமைத்தல் பகுதியில் மாணவர்கள் பயிற்சிகள் செய்வதற்கு இந்தப் பயிற்றி பயன்படும். இதனைப் பொதுப் பகிர்வுக்காக வழங்கி உதவிய ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் அவர்களுக்கு நன்றி. இங்கே சொடுக்கவும்
பேரா , மாலிம் நாவார் எனும் ஊரில் மிகவும் எடுப்பான கட்டடத்தோடும் எழிலான தோற்றத்தோடும் தேசிய வகை மெத்தடிஸ் தமிழ்ப்பள்ளி அமைந்திருக்கிறது. பள்ளியின் வளாகம் மிகச் சிறப்பாக அமைந்துள்ள இப்பள்ளியைச் சுற்றி வருகையில் ஓர் அழகான பூந்தோட்டத்தில் நுழைந்து உலா வந்த உணர்வு எல்லாருக்கும் தோன்றும். அந்த அளவுக்கு மிகவும் அழகான வளாகத்தில் இப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு எப்பிரல் மாதத்தில் இப்பள்ளிக்குப் புதிதாகத் தலைமையாசிரியர் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட திருமதி.சுசிலா கில்டா பள்ளியில் பல உருமாற்றங்களைச் செய்து பலரும் வியக்கும் வகையில் பள்ளியை முன்னேற்றி இருக்கின்றார். புற நிலையில் மட்டுமல்லாது அக நிலையிலும் பள்ளியில் பல்வேறு உருமாற்றங்களை ஆசிரியர்களின் உதவியோடும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் , பள்ளி வாரியக் குழு உதவியோடும் மிகவும் வெற்றிகரமாகச் செய்திருக்கிறார். இப்பள்ளியின் சுவர்களில் அறிஞர் பெருமக்களின் அருமையான பொன்மொழிகள் காட்சி தருகின்றன. எல்லா அறைகளும் தமிழ் அறிஞர் பெருமக்கள் , மாமனிதர்கள் , மேதைகளின் பெயர்களைத் தாங்கி மிகப் பொலிவுடன் மிளிர்கின்றன. பார்க்கும் இடங்கள்...
19.09.2019 வியாழக்கிழமை பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான தொழிற்றகைமை மேம்பாட்டுப் பயிலரங்கு நடைபெற்றது. ஈப்போ ஆசிரியர் கல்வி கழக விரிவுரை அரங்கத்தில் இந்தப் பயிலரங்கு நடந்தது. காலை மணி 8:00க்குத் தொடங்கிய பயிலரங்கு மாலை மணி 5:00 அளவில் நிறைவடைந்தது. பேரா மாநிலக் கல்வித் துணை இயக்குநர் சிறப்பு வருகை மேற்கொண்டு பயிலரங்கை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். இந்தப் பயிலங்கில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 8 தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியின் நனிச்சிறந்த நடைமுறை [AMALAN TERBAIK SJK(T)] பற்றி படைப்பை அரங்கேற்றினர். அவரவர் பள்ளியில் சிறப்பாக உருவாக்கப்பட்ட காணொலிகள் துணையுடன் அவர்கள் தங்களின் படைப்பை வழங்கினார்கள். தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பான வெற்றிக் கதைகளும் சாதனைகளும் காணொலி வடிவத்தில் நனிச்சிறந்த நடைமுறைகளாக அரங்கேறி அனைவருடைய கண்களையும் கருத்தையும் கவர்ந்தன என்றால் மிகையில்லை. 8 orang Guru Besar dari SJK(T) Negeri Perak telah menyampaikan persembahan Amalan Terbaik Sekola...
Kalisridevi
ReplyDeleteDenisha
ReplyDelete