Posts

Showing posts from March, 2022

விழி - மடல் 32 : தமிழ்ப்பள்ளி காப்பது நமது கடமை

Image
 

பேரா மாநிலத்தின் சிறந்த நூலகப் போட்டியில் 2 தமிழ்ப்பள்ளிகள் வெற்றி

Image
2021ஆம் ஆண்டுக்கான பேரா மாநில நிலையில் சிறந்த 13 நூலகங்கள் அதிகாரப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில நிலையில் சிறந்த நூலகப்  போட்டியில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளன. குறைந்த மாணவர் பள்ளிப் பிரிவுக்கான போட்டியில், லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தின் தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி இரண்டாம் பரிசை வென்றுள்ளது. இதே பிரிவில் மூன்றாம் பரிசினை பத்தாங் பாடாங் மாவட்டத்தின் பனோப்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றுள்ளது. மாநில நிலையில் தமிழ்ப்பள்ளிகள் வாகை சூடியிருப்பது பாராட்டுக்குரிய செய்தியாகும். நமது தமிழ்ப்பள்ளிகளும் மற்ற பள்ளிகளுக்கு இணையாக மிகச் சிறப்பாக மிளிர்கின்றன என்பதற்கு இந்த வெற்றியானது நல்லதொரு சான்றாகும். பேரா மாநில நிலையில் குறைந்த மாணவர் பள்ளிப் பிரிவில் 2ஆம் பரிசினை வாகை சூடிய தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி நூலகத்தின் காட்சிகளைக் கீழே காணலாம். தலைமையாசிரியர் திருமதி ஐ.சந்தனமேரி நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி தா.மோகனவள்ளி பேரா மாநில நிலையில் குறைந்த மாணவர் பள்ளிப் பிரிவில் 3ஆம் பரிசினை வாகை சூடிய பனோப்டன் தோட்டத்   தமிழ்ப்பள்ளி நூலகத்தின் காட்சிகளைக் கீழே