Posts

Showing posts from May, 2022

SJK(T) LDG.BULUH AKAR - EUROINVENT புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்க பட்டயச் சான்றிதழ் வென்று சாதனை

Image
2 orang murid SJK(T) Ladang Buluh Akar, Daerah Perak Tengah menang Silver Diploma Award dalam pertandingan European Exhibition Of Creativity And Innovation 2022 peringkat antarabangsa ரோமேனிய நாட்டில் நடைபெற்ற ஐரோப்பிய ஆக்கம் மற்றும் புத்தாக்க கண்காட்சியில் (EUROPEAN EXHIBITION OF CREATIVITY AND INNOVATION - EUROINVENT 2022), பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய "எலி, பல்லி, கரப்பான் பூச்சி போன்ற அழிவு செய்யும் உயிரினங்களை கொல்லாமல் இயற்கையாக கட்டுப்படுத்தும் கண்டுப்பிடிப்பு" வெள்ளிப் பதக்கத்திற்கான பட்டயச் சான்றிதழை (DIPLOMA SILVER AWARD)  வென்றது. இப்போட்டியில் நோர் சஃபிகா முகமது அலி மற்றும் நூருல் நசீரா முகமது நசீர் ஆகிய ஆறாம் ஆண்டு மாணவர்கள் இருவர் கலந்துகொண்டனர். ஆசிரியர் திருமதி அனுராதா முருகேசன் பயிற்றுனராக இருந்து மாணவர்களை வழிநடத்தினார்.   இயங்கலை வாயிலாக நடைபெற்ற இப்போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து பங்குபெற்ற ஒரே தொடக்கப்பள்ளி பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் அமெரிக்கா, கனடா, இந்தியா, உற்பட 27 நாடுகளிலி

SJK(T) LDG.STRATHMASHIE - SAMNOVA 2022 மகிழ் கற்றல் போட்டியில் தங்கமும் வெள்ளியும் வென்று சாதனை

Image
SJK(T) Ladang Strathmashie menang 1 pingat emas dan 1 pingat perak dalam Seminar Amalan Inovasi Pdpc Didik Hibur Peringkat Kebangsaan (SAMNOVA, 2022)  பாகான் டத்தோ மாவட்டம், ஸ்ட்ராத்மாஷி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள், தேசிய நிலையிலான  மகிழ் கற்றல் புத்தாக்கப் போட்டியில் (Seminar Amalan Inovasi Pdpc Didik Hibur Peringkat Kebangsaan SAMNOVA, 2022) தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். தனியாள் நிலை : (தங்கப் பதக்கம்) புத்தாக்கம்: MAFFT (ஆங்கிலப் பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர் :  திருமதி. கோகிலவாணி த/பெ ஜகநாதன் குழு நிலை : (வெள்ளிப்  பதக்கம்) புத்தாக்கம்: 3L Story (ஆங்கிலப் பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர்கள் :  திரு. சுரேந்திரன் த/பெ நாகரத்தினம், திருமதி. கோகிலவாணி த/பெ ஜகநாதன், குமாரி. திவ்யா த/பெ ராஜேந்திரன் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சுசிலா அவர்களின் வழிகாட்டலில் பள்ளியில்  மகிழ் கற்றல் நடவடிக்கையைச் சிறப்பாக மேற்கொண்ட ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். மேலும் தங்களின் மகிழ் கற்றல் நடவடிக்கையைப் போட்டிக்கு அனுப்பி வெற்றியைப் ப

SJK(T) LADANG KAMPAR - SAMNOVA 2022 மகிழ் கற்றல் புத்தாக்கப் போட்டியில் ஆசிரியர்களின் சாதனை

Image
4 orang guru SJK(T) Ladang Kampar menang pingat perak & gangsa dalam Seminar Amalan PdPc Didik Hibur Peringkat Kebangsaan (SAMNOVA) 2022 தென்கிந்தா மாவட்டம், கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 4 ஆசிரியர்கள், தேசிய நிலையிலான மகிழ் கற்றல்  புத்தாக்கப் போட்டியில் (Seminar Amalan Inovasi Pdpc Didik Hibur Peringkat Kebangsaan SAMNOVA, 2022)  பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். குழு நிலை : (வெள்ளிப் பதக்கம்) புத்தாக்கம் : Reading Wisdom Castle (நூலகப் பயன்பாட்டின் நனிச்சிறந்த அம்சம்) சாதனை ஆசிரியர்கள்: 1.திருமதி. நோர்நிஸா மைடின் 2. திருமதி. ரா.விசாலெட்சுமி தனியாள் நிலை:(வெண்கலப் பதக்கம்)  புத்தாக்கம் : Koordismart (கணிதப் பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர்: 3 .திருமதி. கி.சங்கீதா புத்தாக்கம் : KAD SIMBA 4 Dalam 1 ( தேசிய மொழி பாட நனிச்சிறந்த போதனை) சாதனை ஆசிரியர்: 4. திருமதி.கோ.ஷாமினி தேவி தங்களின் சிறப்பான மகிழ் கற்றல் புத்தாக்கத்தின் மூலம் கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு நடத்தும் இவ்வாசிரியர்களின் சீரிய பணிக்கு நனிச்சிறந்த

HARI GURU PERAK 2022 - தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள் ஆசிரியர் திருமதி அர்வினா விருது பெற்றனர்

Image
பேரா மாநில நிலை ஆசிரியர் நாள் விழா கடந்த 19.05.2022ஆம் நாள், தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடந்த இவ்விழா பேரா மாநில முதல்வர் மாண்புமிகு டத்தோ சிறி சரானி முகமது தலைமையில் நடந்தேறியது. 2022ஆம் ஆண்டின் ஆசிரியர் நாள் விருதுகள் வழங்கி ஆசிரியர்கள் சிறப்பிக்கப்பட்டனர். விருது பெற்ற ஆசிரியர்களுள் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவரும் அடங்குவர். கோல கங்சார் மாவட்டம், டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள் வீராசாமி "ஆசிரியர் நன்மதிப்பு விருது" (Pingat Penghormatan Guru) பெற்றார். மிகச் சிறப்பான நிருவாகத் திறனை வெளிப்படுத்தியதோடு பள்ளி உருமாற்றுத் திட்டங்களை மேற்கொண்டதன் அடிப்படையில் தலைமையாசிரியர் திருமதி இராஜம்பாள் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. PINGAT PENGHORMATAN GURU PN.RAJAMBAL A/P VEERASAMY GURU BESAR, SJK(T) LADANG DOVENBY தவிர, பாகான் டத்தோ மாவட்டம், ஜென்றாட்டா தோட்டம் பிரிவு 3 தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் திருமதி அர்வினா சுப்பிரமணியம் &

விழி - மடல் 33 - எழுத்தறிவிக்கும் ஆசிரியர் இறைவனாகும்

Image