SJK(T) SAINT MARY'S - அனைத்துலக கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம்
இந்தியா, தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்துலக கராத்தே போட்டியில் பேரா, கிரியான் மாவட்டம், செயிண்மேரி தமிழ்ப்பள்ளி மாணவன் கீர்த்தனன் குணாளன் மூன்றாம் இடத்தில் வெற்றிகண்டு வெண்கலப் பதக்கத்தை வாகை சூடினார்.
![]() |
Adik Keerthanan Gunalan menang 2 Pingat Gangsa dalam Pertandingan Karate Peringkat Antarabangsa yang berlangsung di Tamilnadu, India pada 1&2 Februari 2020 |
கடந்த 01 மற்றும் 02.02.2020ஆகிய நாள்களில் தமிழ்நாடு, உடுமலை பேட்டையில் அனைத்துலக கராத்தே போட்டி (INTERNATIONAL OPEN KARATE CHAMPIONSHIP 2020) நடைபெற்றது.
இப்போட்டியில் சிறுவர்களுக்கான ஒற்றையர் பிரிவில் (Kata & Kumite Junior Single) கட்டா மற்றும் குமுதே ஆகிய இரண்டு போட்டிகளில் கீர்த்தனன் குணாளன் வெண்கலப் பதக்கத்தை வாகை சூடினார்.
இந்த அனைத்துலக வெற்றியின் மூலம் கீர்த்தனன் குணாளன் தமது குடும்பத்திற்கும் பள்ளிக்கும் மட்டுமின்றி மலேசிய நாட்டிற்கே பெருமை சேர்ந்துள்ளார்.
இந்த வெற்றியைப் பற்றிக் கூறுகையில், செயிண்மேரி தமிழ்ப்பள்ளியின் புதிய எழுச்சிக்கும் உருமாற்றத்திற்கும் இந்த வெற்றி முதல் படியாகும். இவ்வாண்டில் செயிண்மேரி தமிழ்ப்பள்ளி பல புதிய பரிணாமங்களை எட்டிப் பிடிக்கப் போகிறது. அதற்கு இந்த வெற்றி எங்களுக்கு சிறந்த ஊக்கத்தை வழங்கியுள்ளது என்று செயிண்மேரி தமிழ்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
Comments
Post a Comment