SJK(T) PERAK SANGGETHA SABAH - 'சுடர் வானிலே' மாணவர் மின்னிதழ் வெளியீடு [காணொலி இணைப்பு]

வடகிந்தா மாவட்டம், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியில் மாணவர் மின்னிதழ் வெளியீடு கண்டுள்ளது. 

'சுடர் வானிலே' எனும் பெயரைக் கொண்ட இந்த மாணவர் மின்னிதழில் மாணவர்களின் படைப்புகளும் கைவண்ணங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மாணவர்களின் படைப்புகள் அமைந்துள்ளன.

படத்தைச் சொடுக்கி மின்னிதழைக் காணவும்

இப்பள்ளியின் ஆசிரியர் இலாவண்யா மோகன்  பொறுப்பாசிரியராக இருந்து இந்த மின்னிதழை மிகச் சிறப்பான முறையில் வடிவமைப்புச் செய்துள்ளார். அவருடைய முயற்சியும் முனைப்பும் பாராட்டுக்க்குரியது.

பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சந்திரிகா அப்பு இவ்விதழில் வழங்கியுள்ள வாழ்த்துரையில், "மாணவர்கள் நலன்கருதி வெளியாகும் 'சுடர் வானிலே' அனைத்து மாணவர்களின் கைகளிலும் தவழ்ந்து, அவர்களின் திறமையை மேம்படுத்தும் பணியில் நிச்சயம் வெற்றிதனை ஈட்டித்தரும் என்கின்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு" எனத் தெரிவித்துள்ளார்.



மாணவர்களின் வாசிப்பிற்கும் எழுத்தாற்றல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமையும் வகையில் சுடர் வானிலே மின்னிதழை வெளியிட்டுள்ள பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளிக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

Comments

Popular Posts:-

மாணவர் முழக்கம் 2022 -அரையிறுதிச் சுற்றுக்குப் பேராவின் 2 மாணவர்கள் தகுதி பெற்றனர்

PKP HOME BASED LEARNING : இல்லிருப்புக் கற்றல் துணைப் பாடங்கள், பயிற்சிகள், காணொலிகள் & மனமகிழ் கற்றல் மூலங்கள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

பேரா, மலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.

பேரா மாநில நிலை வளர்தமிழ் விழா 2019

WORDWALL : கணித வாய்பாடு புதிர்