SJK(T) PERAK SANGGETHA SABAH & SJK(T) LDG.BATAK RABIT - மாணவர் முழக்கம் 2021இல் பேரா மாநிலத்திற்கு இரட்டை வெற்றி

மாணவர் முழக்கம் 2021 மாபெரும் இறுதிச் சுற்றில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதல் இடத்தையும் இரண்டாம் பரிசையும் வாகை சூடி இரட்டை வெற்றியைக் கண்டுள்ளனர்.

Murid Johnnes Abysia Edwin dari SJK(T) Perak Sanggetha Sabah, Daerah Kinta Utara menjadi Johan dan Adik Darshini Kumaran dari SJK(T) Ldg.Batak Rabit, Daerah Hilir Perak menjadi Naib Johan dalam Pertandingan Pidato Bahasa Tamil 'Maanavar Muzhakkam' Peringkat Kebangsaan pada 23.10.2021

23.10.2021ஆம் நாள் நடந்த மாபெரும் இறுதிச் சுற்றில், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மாணவன் ஜோனஸ் அபிசியா எட்வின் முதல் நிலையில் வெற்றிபெற்றார். இந்த மாபெரும் வெற்றியின் மூலம் முதல் பரிசான RM1000.00 (ஆயிரம் வெள்ளி) தொகையும் நற்சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. நான் கல்வி அமைச்சரானால் கலைப் பாடத்தைக் கட்டாயமாக்குவேன் எனும் தலைப்பில் திறம்பட பேசியதோடு, பொதுமக்கள் மற்றும் நடுவர்களின் வினாக்களுக்கு இலாவகமாக மறுமொழி பேசி ஜோனஸ் அபிசியா முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.



அதே வேளையில், பேரா மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு போட்டியாளர் பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி தர்சினி குமரன் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார். நான் கல்வி அமைச்சரானால் நிதிப் பாடத்தைக் கட்டாயமாக்குவேன் எனும் தலைப்பில் சிறப்பாகப் பேசிய இவருக்கு RM750.00 (எழுநுற்று ஐம்பது வெள்ளி) தொகை மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.


தவிர, பொது மக்களின் வாக்குகளின் அடிப்படையில் மக்கள் தேர்வு பேச்சாளருக்கான சிறப்புப் பரிசையும் ஜோனஸ் அபிசியா வெற்றி கொண்டார். இதற்காக RM250.00 (இருநூற்று ஐம்பது வெள்ளி) பரிசாக வழங்கப்பட்டது.

பேரா, பினாங்கு, ஜொகூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 4 போட்டியாளர்கள் மாபெரும் இறுதிச் சுற்றில் களம் இறங்கினர். அவர்களுள் பேராவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், முதலாவது மற்றும் இரண்டாம் பரிசுகளை வாகை சூடியுள்ள செய்தி பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாணவன் ஜோனஸ் அபிசியா மற்றும் மாணவி தர்சினி குமரன் இருவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.


இந்தச் சாதனை மாணவர்களை உருவாக்கிய பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி மற்றும் தெலுக் இந்தான் பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் திருமதி சந்திரிகா அப்பு மற்றும் திரு.ஆறுமுகம் வேலு ஆகிய இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். மாணவர்களைச் சிறப்பாகப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் வீட்டில் ஊக்கமூட்டி உதவிய பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

‘வெள்ளி மாநிலம்; வெற்றி மாநிலம்’ என்ற முழக்கத்தைத் தேசிய நிலையில் பறைசாற்றியுள்ள இந்த இரண்டு சாதனை மாணவர்களும் தொடர்ந்து நடைபெறவுள்ள அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டிக்குத் தகுதிபெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு பேரா மாநிலம் காத்திருக்கிறது


மேலும் செய்தி:

Comments

Popular Posts:-

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

YOUTUBE காணொலி தமிழ்மொழிப் பாடங்கள் - பாகம் 1

மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

FIND THE DIFFERENCE - வித்தியாசம் கண்டுபிடி விளையாட்டு