அனைத்துலக மாணவர் முழக்கம் :- பேரா மாநிலத்தின் பாராட்டும் வெகுமதியும்

“டிசம்பர் 1ஆம் திகதி சிங்கப்பூரில் நடந்த அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டியில் முதல் பரிசையும் 2-ஆம் பரிசையும் ஒருசேர வென்று மலேசியாவுக்கு இரட்டை வெற்றியை வாங்கிக் கொடுத்த இரண்டு மாணவரையும் பாராட்ட வேண்டும். இவர்கள் இரண்டு பேரும் பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்” என்று ஈப்போவிலுள்ள பேராக் மாநிலச் செயலக மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடந்த பாராட்டு விழாவில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம் கூறினார்.


முதல் பரிசை வென்ற கமல்ராஜ் குணாளன் மற்றும் இரண்டாம் பரிசுக்குரிய கிவேசா சுந்தர் இருவருக்கும் வெற்றிக் கேடயமும் ரொக்கத் தொகை 300 ரிங்கிட்டையும் பேராக் மாநில அரசாங்கம் சார்பில் சிவநேசன் வழங்கினார். மேலும் இவர்களின் பள்ளியான கேப்பிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும், மகிழம்பூ தமிழ்ப்பள்ளிக்கும் தலா மூவாயிரம் ரிங்கிட் வெகுமதியாக வழங்கப்பட்டது.

மேலும் படிக்க..



Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SJK(T) LDG.SABRANG - Cikgu Chelva Cipta Pelbagai Inovasi Tingkat Prestasi

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

வெள்ளி மலர் 2 [Velli Malar Februari 2019]

அனைத்துலக மாணவர் முழக்கம் 2018 - பேரா மாநில மாணவர்கள் இருவர் தேர்வு பெற்றனர்

செந்தமிழ் விழா 2018 - பேரா மாநிலத்தின் குழுவினர் பங்கேற்பு