“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

அக்டோபர் 27-ஆம் தேதி ஒரே நேரத்தில் இலண்டன் நேரப்படி காலை 10.00 மணிக்கு திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியிலும் மலேசிய நேரப்படி மாலை 5.00 மணிக்கு பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியிலும் இந்த இணையம் வழியானக் கல்விப் பரிமாற்றத்தை முன்னிட்டு சிறப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முத்து நெடுமாறன் உரையாற்றினார்.

மூத்த இலங்கை தமிழறிஞர் அமரர் கா.சிவத்தம்பியின் வாசகமான “தமிழ் மொழியின் பெருமை அதன் தொன்மையில் இல்லை. மாறாக அதன் தொடர்ச்சியில்தான் இருக்கிறது” என்பதைத் தனதுரையில் மேற்கோள் காட்டி நினைவுபடுத்திய முத்து நெடுமாறன், அதற்கேற்ப அனைவரும் தமிழ் மொழியைத் தொடர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சிகளின் துணையோடு அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


 

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

KPM - கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பாடங்கள்

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

INSPIRE.MY : தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 பாட வழிகாட்டி [பாகம் 1]

TAMIL EDUCATIONAL APPS – 25 தமிழ்க்கல்விச் செயலிகள்