2019ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் நடடிக்கைகள், போட்டிகள், வெற்றிகள், சாதனைகள் ஆகியவை மின்னூல் வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
4, 5, 6ஆம் ஆண்டு தமிழ்மொழிப் பாட வாக்கியம் அமைத்தல் பயிற்றி இங்கே வழங்கப்படுகின்றது. கெடா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் இதனை உருவாக்கியுள்ளார். வாக்கியம் அமைத்தல் பகுதியில் மாணவர்கள் பயிற்சிகள் செய்வதற்கு இந்தப் பயிற்றி பயன்படும். இதனைப் பொதுப் பகிர்வுக்காக வழங்கி உதவிய ஆசிரியர் திரு.ரகுனேஸ்வரன் அவர்களுக்கு நன்றி. இங்கே சொடுக்கவும்
தமிழ்ப்பள்ளிப் பாட நூல்கள் உள்பட, மலேசியக் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள பாட நூல்கள் ஒரே இடத்தில் கிடைக்கும். தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிப் பாடநூல்களை மின்னியல் வடிவத்தில் பார்க்கலாம்; படிக்கலாம். தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி, மற்றும் தேசியப்பள்ளிக்கான பாடநூல்கள் [BUKU TEKS KSSR] வழங்கப்பட்டுள்ளன. ஆண்டு 1 முதல் ஆண்டு 3 வரையிலான பாடநூல்கள் மட்டும் இப்போதைக்கு உள்ளன. அதேபோல, இடைநிலைப்பள்ளி படிவம் 1 முதல் படிவம் 5 வரை பாடநூல்களும் உள்ளன. தமிழ்ப்பள்ளிக்கான பாடநூல்கள் :- BUKU TEKS SJK(T) [ஆண்டைச் சொடுக்கவும் / Klik Tahun] ஆண்டு / TAHUN 1 ஆண்டு / TAHUN 2 ஆண்டு / TAHUN 3 ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
தமிழ்மொழி கருத்துணர்தல் தாள் கேள்வி 23 மின்நூல் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. தமிழ்ப்பள்ளி ஆண்டு 4, 5, 6 இதனை அச்செடுத்து பயிற்சியாகச் செய்யலாம். இந்தத் தொகுப்பில் மொத்தம் 20 பயிற்சிகள் உள்ளன. தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23 மின்நூல் தொகுப்பு ஆக்கம் : ஆசிரியர் திருமதி நளினி ஜெயராமன் [கோத்தா பாரு தமிழ்ப்பள்ளி, பேரா], ஆசிரியர் திருமதி வாசுகி முருகையா [கோப்பெங் தமிழ்ப்பள்ளி, பேரா] மின்நூலைப் பார்க்க படத்தைச் சொடுக்கவும். CLICK TO VIEW FLIPBOOK மின்நூலைப் பதிவிறக்கம் செய்ய இங்குச் சொடுக்கவும் CLICK HERE TO DOWNLOAD ***** #DUDUK RUMAH #வீட்டில் இருப்போம் #STAY AT HOME ***** ⏪ BACK
வளர்தமிழ் விழா 18ஆவது ஆண்டாகப் பேரா மாநில நிலையில் 10.3.2018ஆம் நாள், ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியில் மிகவும் கோலாகலமாகவும் தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்துடனும் நடைபெற்றது. மஞ்சோங் மாவட்டத் தலைமையாசிரியர் மன்றத்தின் சார்பில் தலைமையாசிரியர் திரு.ஏ.ஆறுமுகம் அவர்களின் தலைமையில் மஞ்சோங் மாவட்டத் தலைமையாசிரியர்கள் அனைவரும் இவ்விழாவினைப் பொறுப்பேற்று நடத்தினார்கள் நாடாளுமன்ற மேலவைத் தலைவரும், ம.இ.கா தேசிய உதவி தலைவருமாகிய மாண்புமிகு தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவினை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். மேலும் தம்முடைய நன்கொடையாகப் பத்தாயிரம் வெள்ளி (RM10,000.00) வழங்கினார். மலேசியக் கல்வி அமைச்சிலிருந்து தமிழ்ப்பள்ளிகளின் முகமை அமைப்பாளர் திரு.பாஸ்கரன் சுப்பிரமணியம் அவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார். பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்திலிருந்து தமிழ்மொழி உதவி இயக்குனர் திரு.ந.சந்திரசேகரன் அவர்களும் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு.சுப.சற்குணன் அவர்களும் வருகையளித்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிர...
22.04.2018 ஞாயிற்றுக்கிழமை கடாரத்திலுள்ள எயிம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தேசிய நிலை செந்தமிழ் விழா போட்டியில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 30 போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர். மலேசியக்கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற இந்தத் தேசிய நிலையிலான போட்டியில் மொத்தம் 10 மாநிலங்களிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். தமிழ்மொழி சார்ந்த மொத்தம் 13 போட்டிகளில் இந்தச் செந்தமிழ் விழாவில் இடம்பெற்றுள்ளன. தமிழ்ப்பள்ளி , தேசியப் பள்ளி , இடைநிலைப் பள்ளி , படிவம் 6 என 4 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்துகொள்வார்கள். மாநில நிலையில் முதலாம் , இரண்டாம் நிலையில் வெற்றிபெற்ற மாணவர்கள் இப்பொழுது தேசிய நிலையில் தங்கள் தமிழ்மொழித் திறனையும் ஆற்றலையும் வெளிபடுத்தவுள்ளனர். பேரா மாநிலத்தின் நிகராளிகளாக 30 மாணவர்கள் கலந்துகொள்ளும் வேளையில் அவர்களோடு மாநிலக் கல்வித் திணைக்களத்தின் சார்பில் 2 உயர் அதிகாரிகளும் 6 ஆசிரியர்களும் கலந்துகொள்வார்கள். தேசிய நிலை செந்தமிழ் விழாவில் கலந்துகொள்ளும் பேரா மாநிலப் போட்டியாளர்களின் விவரங்கள் பின்வருமாறு:- * தமிழ்ப்பள்ளி...
கடந்த 25.04.2018 இல் , பிற்பகல் 2.00 மணிக்கு , கீழ்ப்பேரா மாவட்டத்திலுள்ள சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 2- ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது . இப்போட்டி விளையாட்டினைச் சுங்காய் வட்டாரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் திரு . மோகன் அபிமன்னன் அதிகாரப்படியாகத் தொடக்கி வைத்தார் . சிறு பள்ளியாக இருந்தாலும் பெரிய பள்ளியைப் போல விளையாட்டுப் போட்டியைச் சிறப்பாக நடத்தி பலருடைய பாராட்டினைப் பெற்றுள்ளது சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி. இவ்விளையாட்டுப் போட்டிக்கு ஹிலிர் பேராக் மாவட்டத் தமிழ்ப்பள்ளி கண்காணிப்பாளர் குமரன் பெருமாள் , நோவா ஸ்கோசியா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், சுங்கை தீமா பள்ளியின் முன்னாள் மாணவர்கள் , தோட்ட மேலாளர் , மாணவர்களின் பெற்றோர்கள் , சுற்று வட்டார ஆசிரியர்கள் எனப் பல தரப்பினர் திரளாக வருகை தந்து ஆதரவு தெரிவித்தனர் . இப்பள்ளியின் விளையாட்டுப் போட்டியைச் சிறப்பாக ஏற்று நடத்திய ஆசிரிய...
தமிழ்ப்பள்ளிகளுக்கான கலைத்திட்டங்களும் [DSKP] அண்டுத் திட்டங்களும் [RPT] இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்மொழிச் சிறப்பாசிரியர் ஐயா திருவாளர் முனியாண்டி ராஜ் அவர்கள் இந்த அரும்பணியைச் செய்துள்ளார். ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையிலான கலைத்திட்டங்கள் தமிழ்மொழியில் இங்கு கிடைக்கும். [படத்தைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்யவும்] [sila klik gambar diatas untuk DOWNLOAD] தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் நன்மை கருதி ஐயா அவர்கள் தம்முடைய வலைப்பதிவில் பல்வேறு ஆவணங்கள், கலைத்திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள், வினாத் தாள்கள், பயிற்றிகள் ஆகியவற்றைத் தமது வலைப்பதிவில் தொகுத்து வைத்துள்ளார். தமிழ்மொழிச் சிறப்பாசிரியர் ஐயா திரு.முனியாண்டி ராஜ் - En.Muniandy Raj, Guru Cemerlang Bahasa Tamil SJK(T) Telok Panglima Garang, Selangor. தமிழ்ப்பள்ளி நலன்கருதி தமிழ் உள்ளத்தோடும் தொண்டு மனப்பான்மையோடும் ஐயா திருவாளர் முனியாண்டி ராஜ் அவர்கள் மேற்கொண்டுவரும் இந்த நற்பணியைப் போற்றி பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றோம். அவருடைய வலை...
21ஆம் நூற்றாண்டுக் கல்வி (21st CENTURY EDUCATION) உருமாற்றத்தில் தமிழ்மொழிப் பயன்பாடும் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. அதற்கேற்ப ஒட்பம் நிறுவனம் 25 தமிழ்க்கல்விச் செயலிகளைத் (TAMIL EDUCATIONAL MOBILE APPS) தமிழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக வெளியீடு செய்துள்ளது. தமிழ் இலக்கணம் , மொழி விளையாட்டு , திருக்குறள் , செய்யுள் , அறிவியல் , மலாய் , நன்னெறி , வரலாறு போன்ற பாடங்கள் தொடர்பான 25 குறுஞ்செயலிகள் (APPS) இதில் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் வகுப்பறைக் கற்றல் எளிமையாக்கல் நடவடிக்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றால் பொய்யில்லை. அதோடு , மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே இந்தச் செயலிகளைத் திறன் கருவிகளில் (GADGETS) பயன்படுத்தவும் முடியும். ஒட்பம் நிறுவனத்தின் தமிழ்க்கல்விச் செயலிகளைக் கீழ்க்காணும் முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது கூகிள் பிளேவுக்குச் ( GOOGLE PLAY ) சென்று அங்கிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்ய / DOWNLOAD http://otpam.com/academy/ மலேசியாவில் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள இந்தத் தமிழ...
தேசிய நிலை செந்தமிழ் விழா 2019 துன் உசேன் ஓன் ஆசிரியர் கல்விக் கழகம் பத்து பகாட், ஜொகூர் 20 - 22.08.2019 2019ஆம் ஆண்டின் தேசிய நிலை செந்தமிழ் விழாவில் பங்கேற்பதற்காகப் பேரா மாநில அணி பயணம் மேற்கொண்டது. பேரா மாநிலத் தமிழ்மொழி உதவி இயக்குநர் திரு.ந.சந்திரசேகரன் தலைவராகவும் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் திரு.சுப.சற்குணன் துணைத்தலைவராகவும் பேரா மாநில அணிக்குப் பொறுப்பேற்றுச் செல்கின்றனர். பேரா மாநில இடைநிலைப்பள்ளி, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் 9 பேரும் மாணவர்கள் 24 பேரும் பேரா அணியில் இடம்பெற்றுள்ளனர். மேடைப் பேச்சு, கட்டுரைப் போட்டி, சிறுகதைப் போட்டி, இளையோர் கருத்தாடல், பேச்சுப் போட்டி, கவிதைப் படைப்பு, குழுப்பாடல் எனப் 10 வகையான போட்டிகள் இந்தச் செந்தமிழ் விழாவில் நடைபெறவுள்ளன. பேரா மாநிலத்தைச் சேர்ந்த போட்டியாளர்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற மனதார வாழ்த்துவோம்.
Comments
Post a Comment