SJK(TAMIL) GERIK - யுனெசுகோ நாள் புத்தாக்கக் கண்காட்சி 2018


செப்டம்பர் 28 – 30 வரை ஈப்போவில் நடைபெற்ற யுனெசுகோ மலேசியா நாளையொட்டி (HARI UNESCO MALAYSIA 2018) புத்தாக்கக் கண்காட்சி நடைபெற்றது. இதில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் புத்தாக்கப் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.


கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி மாணவர்களான சில்வியா மித்ரா (ஆண்டு 5), சூர்யா கண்ணன் (ஆண்டு 3), ஹரிஷ் கென்னடி (ஆண்டு 3) ஆகிய மூவரும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களைக் கொண்டு தங்களின் புத்தாக்கத்தை உருவாக்கியிருந்தனர்.

மாணவர்களுடன் சேர்ந்து பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.இராஜம்பாள், ஆசிரியர்கள் திருமதி சுகுனா மணியம், செல்வி ஈஸ்வரி அர்ஜுணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.










அனைத்துலகத் தரத்தில் நடைபெற்ற இந்தப் புத்தாக்கக் கண்காட்சியில் கலந்துகொண்ட ஒரே தமிழ்ப்பள்ளி என்ற சிறப்பினைக் கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி இதன்வழி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular Posts:-

மின்நூல் : தமிழ்மொழி கருத்துணர்தல் கேள்வி 23

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

பேரா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் குமரன், தமிழ்மணி இருவருக்கும் தங்க விருது

WEBINAR STPK / வலையரங்கம் #19 - மின்கற்றல் துணைப்பொருள் அறிவார்ந்த பகிர்வு [பாகம் 4]

SJK(T) CHETTIARS. IPOH - புத்தாக்க ஆடை அலங்காரப் போட்டியில் இரண்டாம் பரிசு

KERTAS TRIAL UPSR SJK(T) 2019 - NEGERI SELANGOR

SJK(T) LDG.SUNGAI WANGI II -இந்தோனேசியா புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

WEBINAR STPK / வலையரங்கம் #18 - கல்வியில் புதிய இயல்பு : பள்ளி நிருவாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு