SJK(T) LDG.KAMATCHY - [கோவிட் 19] நாடும் மக்களும் நலம்பெற இறை வேண்டுகை

கடந்த 01.06.2021 இரவு 7.30 முதல் 7.45 வரை பேரா, பாகான் டத்தோ மாவட்டம், தேசிய வகை காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் "மலேசியாவிற்குப் பிரார்த்திப்போம்" என்ற இறை வேண்டுகை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.  இக்கூட்டுப் பிரார்த்தனையில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பாதுகாவலர், தோட்டக்காரர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பள்ளியின் நிர்வாக உறுப்பினர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.


இன்றையக் கால கட்டத்தில் உலக நாடுகள் மட்டுமின்றி நம் நாடும் கோவிட் -19 என்ற கிருமியின் கொடூரத் தாக்குதலில்  சிக்குண்டு அல்லல் படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. நாளுக்கு நாள் இக்கிருமியின் தாக்குதல் பயங்கர வேகத்தில் பரவி மரண எண்ணிக்கையையும் கிடுகிடுவென உயர்த்திக் கொண்டே வருகின்றது. சிறுவர் முதல் பெரியவர் வரை பல உயிர்கள் இத்தாக்குதலின் காரணமாகப் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.



இந்நிலையை மாற்றியமைக்கும் ஆற்றல் எத்திசையிலும் எல்லையில்லாமல் நீக்கமற நிறைந்துள்ள இறையருளுக்கே உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு  நம் நாடு இக்கிருமியின் கோரப்பிடியிலிருந்து விடுபட்டு மேன்மையடைய வேண்டும் என்பதையும் கிருமியின் தாக்குதலுக்கு ஆளான மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது




காணொலி இணைப்பு


Comments

Popular Posts:-

கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் புத்தாக்கச் சாதனை

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

SJK(T) CHETTIARS, IPOH - நைஜீரியா நாட்டின் தங்கப் பதக்கம் வென்று மகத்தான சாதனை

அறிவியல் விழா 2020 - வடபேரா ஆசிரியர்களுக்கான பட்டறை

SJK(T) LADANG CHEMOR - ஆசிரியர் அசோக் பிள்ளை வெங்கல விருது வென்றார்

WORDWALL மூலம் மின் பயிற்சிகள் உருவாக்குவது எப்படி?

SJK(T) ARUMUGAM PILLAI - அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

iMarkup : கைப்பேசி மூலம் மின்-திருத்தம் செய்வது எப்படி?

SJK(T) LDG.GLENEALY - மெய்நிகர் புத்தாக்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்