தமிழ்ப்பள்ளிகளில் தாய்மொழி நாள் – விமரிசையானக் கொண்டாட்டங்கள்

பிப்ரவரி 21ஆம் நாள் அனைத்துலகத் தாய்மொழி நாளாக உலக மக்களால் கொண்டாடப்படுகிறது. அவரவர் தாய்மொழியை உணர்ந்து பற்றையும் உணர்வையும் வளர்த்துக் கொள்ள தாய்மொழி நாள் வழிவகுக்கிறது எனலாம்.
அந்தவகையில் பல்வேறு அமைப்புகள் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. தமிழ்ப்பள்ளிகளும் இந்தத் தாய்மொழி நாளை முன்னிட்டு விழாக்களை நடத்தியுள்ளன.

மாணவர் மனங்களில் தாய்மொழி மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தி மொழிப்பற்றை விதைக்கும் நோக்கில் பல பள்ளிகளில் விழா எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பேராக் மாநிலத்தில் அதிகமான பள்ளிகளில் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பேராக் மாநிலத்தில் முதன் முறையாக 56 பள்ளிகளில் தாய்மொழி நாள் நடந்துள்ள வேளையில் இவ்வாண்டில் 70 தமிழ்ப்பள்ளிகளில் விழா எடுக்கப்பட்டுள்ளதாகப் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் தெரிவித்தார்.

Comments

Popular Posts:-

SCIENCE EXPERIMENT : எளிமையான அறிவியல் ஆய்வுகள்

தமிழ்மொழி வாக்கியம் அமைத்தல் பயிற்றி

SJK(TAMIL) ST.PHILOMENA CONVENT : அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம்

மாவட்ட நிலை சதுரங்கப் போட்டியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மகத்தான சாதனை

DSKP & RPT - 2020 கலைத்திட்டங்களும் ஆண்டுத் திட்டங்களும்

அனைத்துலக மாணவர் முழக்கம் இறுதிச் சுற்றுக்கு மலேசியா (பேரா), இலங்கை மற்றும் டென்மார்க் தேர்வு

QUIZIZZ : 5 கணிதப் புதிர் விளையாட்டு

IPITEx2020 BANGKOK - பேரா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மகத்தான சாதனை

WORDWALL : கணித வாய்பாடு புதிர்

BUKU TEKS KPM : மின்னியல் பாட நூல்கள்