SJK(TAMIL) LDG.BULUH AKAR : புத்தாக்கப் போட்டியில் பங்கெடுக்க பாங்காக் பயணம்
“வெள்ளி மாநிலம் வெற்றி மாநிலம்” என்னும் முழக்கவரிக்கு ஏற்ப
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் கடந்த ஆண்டில் பல வெற்றிகளையும் சாதனைகளையும்
பெற்றது குறிப்பிடத்தக்கது.
பிறந்துள்ள 2019-ஆம் ஆண்டில் முதலாவது வெற்றியாக பேராக் மாநிலத்தில்
உள்ள பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புத்தாக்கப் போட்டியில்
கலந்துகொள்ள நாளை வெள்ளிக்கிழமை பிப்ரவரி 1-ஆம் தேதி பாங்காக் நோக்கிப்
பயணமாகிறார்கள்.
இப்பள்ளி மாணவர்களான மாணவர் சூரியமூர்த்தி சிவம், தாமரைச்செல்வி
கிருஷ்ணன் ஆகிய இருவர் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். ஆசிரியர்
திருமதி மு. அனுராதா,திருமதி மு. நிர்மலா தேவி ஆகியோர் உடன் செல்கிறார்கள்.
இப்போட்டி பிப்ரவரி 2 முதல் 7-ம் தேதி வரை தாய்லாந்து நாட்டின் தலைநகரான
பாங்காக் மாநகரில் நடைபெறுகிறது என்னும் தகவலைப் பள்ளியின் தலைமையாசிரியர்
மனஹரன் தெரிவித்தார்.
Comments
Post a Comment